திருவடியை நினைக்கவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் கதிர்காமத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட சிறிய வடிவம். முதற் சீரில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டாம் சீரில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; மூன்றாம் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு ஒற்றெழுத்தும்; தொங்கல் சீரில் எப்போதும் போல நான்கெழுத்துகளும் அமைந்து இரட்டித்துள்ளன.
தனன தான தத்த தனதான
எதிரி லாத பத்தி தனைமேவி
இனிய தாள்நி னைப்பை யிருபோதும்
இதய வாரி திக்கு ளுறவாகி
எனது ளேசி றக்க அருள்வாயே
கதிர காம வெற்பி லுறைவோனே
கனக மேரு வொத்த புயவீரா
மதுர வாணி யுற்ற கழலோனே
வழுதி கூனி மிர்த்த பெருமாளே.