பகுதி - 884

எப்போதும் உனது திருவடிகளை..
பகுதி - 884

 

‘எப்போதும் உனது திருவடிகளை ஓதவேண்டும்’ என்று கோரும் இப் பாடல் திருத்தணிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் என இரண்டெழுத்துகளுமாக அமைந்துள்ளன.

தனத்தன தானந் தனத்தன தானந்

      தனத்தன தானந்                    தனதான

 

வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்

         பினுக்கெதி ராகும்                விழிமாதர்

      மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்

         சமத்திடை போய்வெந்            துயர்மூழ்கிக்

கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்

         கருக்குழி தோறுங்                கவிழாதே

      கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்

         கழற்புக ழோதுங்                 கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்

         சியைப்புணர் வாகம்              புயவேளே

      பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்

         பொருக்கெழ வானும்             புகைமீளச்

சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்

         திறக்கம ராடுந்                   திறல்வேலா

      திருப்புகழ ழோதுங் கருத்தினர் சேருந்

         திருத்தணி மேவும்               பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com