பகுதி - 886

சிவரூபத்தை அடைகின்ற உபாயத்தைச்..
பகுதி - 886

‘சிவரூபத்தை அடைகின்ற உபாயத்தைச் சொல்லியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில் என இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு நெடில், ஒரு குறில் என்று மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தான தானான தனன தான தானான

      தனன தான தானான                தனதான

உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத

         உணர்வி னூடு வானூடு          முதுதீயூ

      டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு

         மொருவ ரோடு மேவாத         தனிஞானச்

சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு

         துரிய வாகு லாதீத               சிவரூபம்

      தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை

         தொடுமு பாய மேதோசொ       லருள்வாயே

மடல றாத வாரீச அடவி சாடி மாறான

         வரிவ ரால்கு வால்சாய          அமராடி

      மதகு தாவி மீதோடி யுழல ரால டாதோடி

         மடையை மோதி யாறூடு        தடமாகக்

கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு

         கமல வாவி மேல்வீழு           மலர்வாவிக்

      கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர

         கருணை மேரு வேதேவர்        பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com