பகுதி -900

ஞான வாழ்வைக் கோரும்..
பகுதி -900

ஞான வாழ்வைக் கோரும் இந்தப் பாடல் மதுரைக்கானது.  சிலர் இதனை ஈரோடு, பவானிக்கு உரியது என்றும் கருதுகிறார்கள்.

அடிக்கு 20 எழுத்துகள் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு ஆகிய தொங்கல் சீர்களில் ஒரு நெடிலுடன் கூடிய நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதான தானத்                                                      தனதான

கலைமேவு ஞானப்                                                 பிரகாசக்

      கடலாடி ஆசைக்                                         கடலேறிப்

பலமாய வாதிற்                                                      பிறழாதே

            பதிஞான வாழ்வைத்                                 தருவாயே

மலைமேவு மாயக்                                                 குறமாதின்

            மனமேவு வாலக்                                        குமரேசா

சிலைவேட சேவற்                                                 கொடியோனே

            திருவாணி கூடற்                                       பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com