பகுதி - 736

திருக்கழல்களைத் தந்தருளவேண்டும்
பகுதி - 736

ஞானமாகிய உனது திருக்கழல்களைத் தந்தருளவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 14 எழுத்துகளைக் கொண்ட மிகச்சிறிய அமைப்பு.  ஒன்று மூன்று ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாய் மூன்றெழுத்துகளையும்; இரண்டு, (தொங்கல் சீராகிய) நான்கு ஆகிய சீர்களில் இரண்டு குறில் இரண்டு நெடில் என நான்கெழுத்துகளையும் கொண்டு அமைந்திருக்கிறது.


தானானத் தனதானா
      தானானத் தனதானா

நீதானெத் தனையாலும் 
      நீடூழிக் க்ருபையாகி

மாதானத் தனமாக
      மாஞானக் கழல்தாராய்

வேதாமைத் துனவேளே
      வீராசற் குணசீலா

ஆதாரத் தொளியானே
      ஆரூரிற் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com