பகுதி - 854

இந்த வாழ்வில் எல்லாமும் உன் செயலே’ என்று போற்றுகின்ற இந்தப் பாடல் வயலூருக்கானது.
பகுதி - 854

‘இந்த வாழ்வில் எல்லாமும் உன் செயலே’ என்று போற்றுகின்ற இந்தப் பாடல் வயலூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக அமைந்துள்ளன.

தன்னா தனத்தன தன்னா தனத்தன

                தன்னா தனத்தன                                                     தந்ததான

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்

                        என்னால் துதிக்கவும்                                    கண்களாலே

                என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்

                        என்னா லிருக்கவும்                                        பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்

                        என்னால் சலிக்கவும்                                    தொந்தநோயை

                என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்

                        என்னால் தரிக்கவும்                                      இங்குநானார்

கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்

                        கர்ணா மிர்தப்பதம்                                          தந்தகோவே

                கல்லார் மனத்துட னில்லா மனத்தவ

                        கண்ணா டியிற்றடம்                                      கண்டவேலா

மன்னா னதக்கனை முன்னாள் முடித்தலை

                        வன்வா ளியிற்கொளும்                             தங்கரூபன்

                மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி

                        மன்னா முவர்க்கொரு                                 தம்பிரானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com