பகுதி - 858

கருவிலே விழுந்து மீண்டும்..
பகுதி - 858

‘கருவிலே விழுந்து மீண்டும் மீண்டும் பிறக்கின்ற இந்த நிலை ஒழியவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் உள்ளன.

தனதனன தந்த தனதனன தந்த

                தனதனன தந்த                                                           தனதான

மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்

                        வலிமைகுல நின்ற                                        நிலையூர்பேர்

      வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்

                        வரிசைதம ரென்று                                          வருமாயக்

கனவுநிலை யின்ப மதனையென தென்று

                        கருதிவிழி யின்ப                                              மடவார்தம்

      கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து

                        கருவில் விழுகின்ற                                       தியல்போதான்

நினையுநின தன்பர் பழவினைக ளைந்து

                        நெடுவரைபி ளந்த                                            கதிர்வேலா

      நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்

                        நிலைபெறஇ ருந்த                                          முருகோனே

புனைமலர்பு னைந்த புனமறம டந்தை

                        புளகஇரு கொங்கை                                        புணர்மார்பா

      பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்

                        பொடிபடந டந்த                                                  பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com