பகுதி - 860

யமபயம் கெடுவதைக் கோரும்..
பகுதி - 860

யமபயம் கெடுவதைக் கோரும் இப்பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழிது 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகள் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தாத்தத் தத்தன தாத்தத் தத்தன

                தாத்தத் தத்தன                                                          தனதான

மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு

                        மூச்சுற் றுச்செயல்                                           தடுமாறி

      மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட

                         மூக்குக் குட்சளி                                                யிளையோடும்

கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு

                        கூட்டிற் புக்குயி                                                  ரலையாமுன்

      கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்

                        கூட்டிச் சற்றருள்                                              புரிவாயே

காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்

                        காப்பைக் கட்டவர்                                            குருநாதா

      காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல

                        காப்புக் குத்திர                                                     மொழிவோனே

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்

                        வாய்க்குச் சித்திர                                              முருகோனே

      வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை

                        வாய்க்குட் பொற்பமர்                                   பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com