‘அநுபூதி நிலையைத் தரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திரிசிராப்பள்ளிக்கு உரியது. எனினும் பாடலின் ஈற்றடியில் ‘சக சிரகிரிப் பதிவேளே’ என்று குறிப்பிடப்படுவதால், சிரம்=சென்னி என்றுகொண்டு ‘சிரகிரி’ என்பது சென்னிமலையைக் குறிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட மிகச்சிறிய பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஆறு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டாம் சீரான தொங்கல் சீரில் எப்போதும்போல மூன்றாம் எழுத்து நெடிலாக அமையும் நான்கெழுத்துகள் அமைந்துள்ளன.
தனதனதனத் தனதான
பகலிரவினிற் றடுமாறா
பதிகுருவெனத் தெளிபோத
ரகசியமுரைத் தனுபூதி
ரதநிலைதனைத் தருவாயே
இகபரமதற் கிறையோனே
இயலிசையின்முத் தமிழோனே
சகசிரகிரிப் பதிவேளே
சரவ ணபவப் பெருமாளே.