பகுதி - 922

உன்னுடைய திருக்கழல்களைப் போற்றுகின்ற..
பகுதி - 922

‘உன்னுடைய திருக்கழல்களைப் போற்றுகின்ற உயர்ந்த குணசீலத்தைத் தந்தருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக ஐந்தெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனத்ததன தனதான தனத்ததன தனதான

      தனத்ததன தனதான                தனதான

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை

         மயக்கிவிடு மடவார்கள்          மயலாலே

      மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி

         வயிற்றிலெரி மிகமூள           அதனாலே

ஒருத்தருட னுறவாகி ஒருத்தாரொடு பகையாகி

         ஒருத்தர்தமை மிகநாடி           யவரோடே

      உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட

         உயர்ச்சிபெறு குணசீல            மருள்வாயே

விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை

         மிகுத்தபல முடனோத           மகிழ்வோனே

      வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள

         விளைத்ததொரு தமிழ்பாடு       புலவோனே

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது

         திருக்கையினில் வடிவேலை     யுடையோனே

      திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான

         திருத்தணிகை மலைமேவு       பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com