பகுதி - 904

நொந்து போகாமல் ஆண்டருள..
பகுதி - 904

‘நொந்து போகாமல் ஆண்டருள வேண்டும்’ என்று நாயகி பாவத்தில் கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனன தனதன தனன

            தனதன தனன                                             தந்ததான

இடமடு சுறவை முடுகிய மகர

                  மெறிகட லிடையெழு                         திங்களாலே

            இருவினை மகளிர் மருவிய தெருவி

                  லெரியென வருசிறு                             தென்றலாலே

தடநடு வுடைய கடிபடு கொடிய

                  சரம்விடு தறுகண                                 நங்கனாலே

            சரிவளை கழல மயல்கொளு மரிவை

                  தனிமல ரணையின                             லங்கலாமோ

வடகுல சயில நெடுவுட லசுரர்

                  மணிமுடி சிதறஎ                                  றிந்தவேலா

            மறமக ளமுத புளகித களப

                  வளரிள முலையைம                          ணந்தமார்பா

அடலணி விகட மரகத மயிலி

                  லழகுட னருணையி                            னின்றகோவே

            அருமறை விததி முறைமுறை பகரு

                  மரியர பிரமர்கள்                                   தம்பிரானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com