ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச இணைய தினமாக கொண்டாடப்படுகிறது.2005-ஆம் ஆண்டில் இருந்து இந்த தினம் கொண்டாடபடுகின்றது.
1969-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் உலகின் முதல் கணினி வழி செய்தி அமெரிக்காவில் பறிமாறிக் கொள்ளப்பட்டது.
இன்றைய நவீன கால உலகில் இணையம் என்பது மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. இணையப் பயன்பாடு என்பது தொழில் சார்ந்ததாகவும், மருத்துவம், பொழுது போக்கு என எல்லாவற்றிலும் பரவியுள்ளது.
இதன் காரணமாக கிராமங்கள் முதல் நகரம் வரை ஒன்றினைந்ததுடன் இதன் பயன்பாட்டினால் உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு விஷயத்தைக் கூட செய்தியாகவோ, வேறு வகையிலோ நம்மால் உடனுக்குடன் அறிய முடிகின்றது.