1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை, உலக சுகாதார தினமாக கொண்டாடுகிறோம்.
உலகின் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.
உலகநாடுகளைஒருங்கிணைத்து ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் சுகாதார மற்றும்மருத்துவம் குறித்த விசேஷ நோக்கங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே உலக சுகாதார நிறுவனம் ஆகும்.
இது சுகாதாரம் தொடர்பிலான நிலைப்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் சுகாதாரம் தொடர்பான நிகழ்தகவுகளை வெற்றிகரமாக கொண்டு செல்வதே இந்த நிறுவனத்தின் குறிக்கோளாகும்.