அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு வடகிழக்கு எல்லைப்புற மாநிலமாகும். இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் இதுவும் ஒன்று. மற்றது அக்சாய் சின்.
அருணாசலப் பிரதேசம் முன்னர் NEFA (வட கிழக்கு முன்னணி ஏஜென்சி) என அழைக்கப்பட்டது. 1987 வரை அஸ்ஸாமின் ஒரு பகுதியாக விளங்கியது.
நாட்டின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பையும், இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வந்த சிக்கலான நிலையையும் கருத்தில் கொண்டு இதற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.