14.03.1879: இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியலாளரான ஐன்ஸ்டைன் பிறந்த தினம் இன்று!

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்
14.03.1879: இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியலாளரான ஐன்ஸ்டைன் பிறந்த தினம் இன்று!

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளரர் என்று பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார்.

இவர் உலகப் புகழ் பெற்ற சார்புக் கோட்பாட்டை  கண்டுபிடித்து அளித்தார். மேலும் குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1999-ஆம் ஆண்டு புத்தாயிரமாவது ஆண்டை குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com