வானத்தின் தலைமேல் மேகப்பையாய்..
பேதம் பார்க்காமல் விழும் நீள் துளியாய்
குடைகளில் வழுக்கும் நீர்த்தாரையாய்
பள்ளம் பார்த்துப் பாயும் குறு ஊற்றாய்
கற்களை கூழாங்கற்களாய் உருட்டும் ஓடையாய்
பிரவாகமெடுத்து பாயும் படர் நதியாய்
வனங்களின் வேர்களுக்கு பாலூட்டும் திரவ காம்பாய்
பூவின் நறுமணத்தில் குழைந்த மதுவாய்
உயிர்களின் இரப்பையை ஈரமாக்கும் புத்துயிராய்
புழுதி மண்ணில் வாசம் கண்டுபிடிக்கும் முதல் துளியாய்
பிரபஞ்சத்தின் ஒற்றைக் கடலாய் வாழும்
மழை நீர் போல் வாழ்வோம்..
தனித்துவமாய்