மழை நீர் போல: கா. மகேந்திரபிரபு

மழை நீர் போல..."

வானம் தரும் மாமழை 
கானம் பாட வைக்கும் 
தானம் தரும் வருணன் 
பானம் தரும் மழை !

மழை தரும் மகிழ்ச்சி 
மனம் பெறும் உற்சாகம் 
மெய் சிலிர்க்கும் குளிர்ச்சி 
குழவிக்கு தாய்ப்பால் போலவே !

உணவுக்கு காய்கனிகள்  தர 
உழவுக்கு உயிர் உரம் தரும் 
உடல் உணர்வுக்கு சுகம் தரும் 
மழை நீர் ஆகாயம் தேவதை !

கருமேக கூட்டத்திற்குள் 
வெள்ளி முத்தென்ன மழை நீர்
துள்ளி குதித்து ஈரம் தரும் 
அள்ளிப் பருகலாம் இனிதே !

என்றும் என்றென்றும் 
மகிழ்வோம் மழை நீர் போல் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com