மழை நீர் போல..."
வானம் தரும் மாமழை
கானம் பாட வைக்கும்
தானம் தரும் வருணன்
பானம் தரும் மழை !
மழை தரும் மகிழ்ச்சி
மனம் பெறும் உற்சாகம்
மெய் சிலிர்க்கும் குளிர்ச்சி
குழவிக்கு தாய்ப்பால் போலவே !
உணவுக்கு காய்கனிகள் தர
உழவுக்கு உயிர் உரம் தரும்
உடல் உணர்வுக்கு சுகம் தரும்
மழை நீர் ஆகாயம் தேவதை !
கருமேக கூட்டத்திற்குள்
வெள்ளி முத்தென்ன மழை நீர்
துள்ளி குதித்து ஈரம் தரும்
அள்ளிப் பருகலாம் இனிதே !
என்றும் என்றென்றும்
மகிழ்வோம் மழை நீர் போல் !