மழைனீர்போல் வேண்டுவது வேறொன் றில்லை
மண்ணுலகம் தழைத்திடுமோ மழைனீர் இன்றி ?
விழைந்திட்டு அழைததாலது பொழிவதும் இல்லை
வீண்விரையம் ஊட்டாமல் இருப்பதும் இல்லை !
அழைக்காமல் மும்மாறி பெய்ததாம் அன்று
ஆர்செய்தக் குற்றமதால் மழையிலை இன்று ?
பிழைப்புக்கு என்செய்வார் மக்கள் பாவம்
பெரிதுமாய் வறட்சியதே என்றிட்டு ஆக?
மாட்சிகொண்ட நீரென்றால் மழைனீர் தானே
மாகடலும் வற்றாதோ மழையற்றுப் போக!
வீட்சிகளும் ஆறுகளும் மழையினால் தானாம்
விண்ணின்கொடை மழைதானெ தாகத்தைத் தீர்க்கும் ?
ஆட்சியதும் சிறப்புறவே நடக்கின்றப் போதில்
ஆண்டுமுழுதும் மழைவுண்டு என்றிடும் நூல்கள் !
காட்டாட்சி எனத்தக்க ஆட்சியென் றாகக்
காணாதே போய்விடுமாம் மழையதும் நாட்டில் !
நீரின்றி நிலத்தாலே என்னபயன் ?--- உலகில்
நிலம்தன்னால் எதுதன்னை விளைத்டுமோ ?
வேரின்றி மரம்மண்மேல் நிலைத்திடுமோ ?--- பரந்த
விண்ணின்றி கோள்களதும் தவழ்ந்திடுமோ?
சேறின்றிப் பயிர்களதும் விளைந்திடுமோ ?--- இரு
சிறகின்றிப் பறவைகளும் பறந்திடுமோ ?
காரின்றி நீரதனை எதுதருமோ ? ---அந்தக்
கருணைதனை நாமென்றும் போற்றுவோமே !
உயிர்கள்தனைக் காக்கவல்ல உன்னதநீர் மழைநீரே !
பயிர்விளைக்கும், நம்மின் பசியாற்றூம் ! --- செயற்கையாய்
இன்னதனை உருவாக்க இயலாததே இதன்சிறப்பாம்,
என்னாவோம் மழையின்றி, இயம்பு !
மழையில்லை என்றாக மக்களில்லை உயிர்களில்லை,
பிழைக்கவழி இல்லையிப் பேருலகில் ! --- தழைத்தோங்க
இன்னதுவே ஆதாரம் , இயற்கையதன் நற்கொடையாம் !
என்னாளும் மறவாதே இதை !
மண்ணுலகில் மழைனீர்க்கு மாற்றில்லை இயற்கைதரும்
தண்ணீரை சேமிக்கத் தயங்காதே ! --- விண்பொய்க்க
உயிர்கள் மடிந்தழியும், உலகமதே வெறிச்சோடும் ;
பயிர்களின்றி ஆறிடுமோ பசி ?