சுவாசிக்க காற்று கேட்டேன்
நேசிக்க மனிதம் கேட்டேன்
விரல் பிடித்து விளையாட
நண்பன் கேட்டேன்
கண் பார்த்து பசியாற
உறவெனும் உன்னதம் கேட்டேன்
பெணிவளை பரிசாய் தந்து
வரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தாயே
இறைவா
ஏனிந்த விளையாட்டு என்றேன்
படைத்தவன் பதிலளித்தான்
மீண்டும் பிறப்பெடுக்க நினைத்தால்
பெண்ணாக பிறந்து பார்..
இந்த முற்றுப் புள்ளிதான்
பிரபஞ்சத்தின் முதற்புள்ளியென்று
உணர்வாய் நீ...!