அரியாசனம்:   ந.நரசிங்கமூர்த்தி

அரித்தன்னை சுமக்கும் ஆசனம்
அரியாத சனத்தினை ஆயுள்வரை
ஆட்டிவைக்கும் ஆசனம்
வஞ்சிப்பவருக்கு என்றைக்கும்
கனியாத ஆசனம்
எஞ்சியவருக்கு என்றும்
எட்டாக் கனியான ஆசனம்
சித்தனுக்கு சிதையே
சிவனாசனம் அந்த பக்தனின்
மனமே அவனாசனம்
தாய்க்கு மகன் என்றும்
சிம்மாசனம் இந்தசேயின்
மனதில் தாய்க்கென்றும்-தனியாசனம்                                  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com