அரியாசனம்:  ரீகன். ஜெயக்குமார்

அகிலத்தில் தானே 
தோன்றியதோ மனித இனம்??,
தேடிச்செல்லும்,
வழியெல்லாம் ரத்தக்கறை..

அழித்திட்ட உயிரெல்லாம்,
அதிகமாக இருக்கும்போது,
தவறாக இருக்குமோ,
தடயமனைத்தும்..

எப்பொருள் அடைய,
மெய்ப்பொருள் அழித்திட்டாய்,
கண்டுவிட்டாயோ,
காலனின் வழி...

தப்பிக்க வழி அடைத்து,
தடயங்கள் தராமல்,
கெக்கலித்து சிரிப்பது,
யார் இப்போது..

இன்னும் மறக்கவில்லை,
நீ செய்திட்ட தவறுகள்,
இனி மன்னிக்க வழியுமில்லை,
அதற்கினி நேரமுமில்லை..

முடிவுப்பொழுது நெருங்கிவிடின்,
யார் தடுப்பார்,
இயற்கையதின்,
அரியாசனம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com