கவிதைமணி
மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு : ரீகன். ஜெய்குமார்
ஜல்லிகட்டு வரும் நாளே..
பொங்கலுக்கு திரு நாளே..
அய்யனாரு அருளாலே...
தேடி வரும்...அடியே
ஊரு சனம் ஒத்துமையா...
கூடி வரும்.!
காங்கேயம் காள இருக்கு..
கட்டுத்தரி காத்து கிடக்கு..
மூக்காயி மாமனோட...
மல்லுகட்டும் ஆசையிலே...
மத்தில சட்டம் வருமா...
மாநிலமும் ஒத்து வருமா..
ஜல்லிகட்டு நடைபெறாம
பொங்க பானை பொங்கி வருமா.!