இன்றைய தாலாட்டு: கவிஞர்.கோவிந்தராஜன் பாலு 

தூக்கத்தை ஏன்மறந்தாய் துள்ளாதே கண்ணே.
   தொல்லைகள் செய்யாமல் தூங்கிவிடு பெண்ணே.
ஏக்கமுடன் வாழ்க்கையும் இனிக்கவில்லை என்றும்
   ஏழ்மையுமே வாட்டுவதால் இன்பமில்லை இன்றும்.
ஊக்கமுடன் வாழவேண்டும் உன்னதமாய் நீயும்.
   உள்ளத்தால் வெள்ளமாக உவந்தேதான் பாயும்.
தாக்கங்கள் வந்தாலும் தளராதே தாழ்வில்.
   தன்னம்பிக்கைக் கொள்வாய்த் தயங்காமல் வாழ்வில்.

அறிவியலால் மாற்றங்கள் ஆயிரங்கள் உண்டு.
   அத்தனையுயும் நன்மைக்கே அறிந்திடுவாய்க் கண்டு.
தெறித்தோடும் எண்ணங்கள் தேக்கங்கள் தந்தே.
   தெளிவான சிந்தனைகள் தீயாக வந்தே.
குறிவைத்தே வாழ்க்கையில் குழிபறிப்பார் நாடி.
   குணங்களையும் மாற்றிடுவார் கொள்ளையராய் தேடி.
நெறிபிறழா நல்லுரைகள் நித்தமுமே கேட்டு .
   நீதியோடு வாழ்ந்திட்டால் நெஞ்சம்பா ராட்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com