திருவாலி
கிராமத்து திண்ணையில்
ராஜ ராகங்கள் கேட்டபடி
தென்னை மர காற்று
குளிரை வாரி வாரி வீசியபடி
வயலோரம் அள்ளி அள்ளி
அலையடிக்கும் நாரை,
கொக்கு, கெண்டை மீனை
பார்த்தபடி
அம்மா எடுத்து வரும்
புளியோதரை , தயிர் சாதத்தை
சாப்பிட்ட காலம்
வயல் வரப்பில்
படுத்து உறங்கியபடி
இருந்த
இன்ப காலத்தை, இழந்த காலத்தை
கனவில்
ஆழ்ந்தபடி
தீப்பெட்டி அளவு அபார்ட்மெண்ட்ஸில்
ஒடுங்கியிருக்கையில்
எங்கிருந்தோ கேட்கும் ராஜ ராகம்
இன்றைய தாலாட்டு !