இன்றைய தாலாட்டு: சீர்காழி.ஆர் .சீதாராமன்

எதிலும் புதுமை 
தொழில் நுட்பம் புகுந்த 
இந்த காலத்தில்
தாலாட்டிலும் மாற்றம்

செல்போன் இல்லாத   
இன்றைய  குழந்தையே இல்லை 
என்னும் அளவுக்கு  தாலாட்டும் 
செல்போனில் உறைந்து விட்டது

தேன் தமிழ் கலந்த வீரம்
அழகு இயற்கை கலந்த
அன்றைய கால தாலாட்டு
கலப்பின தமிழ் ஆங்கில
ரைம்ஸ் சரளமான இன்றைய
பலவீனமான தாலாட்டு "

தொட்டில் தூளி தாய் மடி
தாலாட்டும் தாய்க்கு உபகரணம்
மன அழுத்த தாலாட்டு என்பது
மட்டும் கலிகால உண்மை "

தாலாட்டில் காலம் நகர்த்திய
காலம் போக தாலாட்ட நேரம்
ஒதுக்கும் இன்றைய காலம்
தாலாட்டும் ஒரு பகுதி வேலை
என்றான போது சுமையே

குழந்தைச் செல்வம் கிட்டிய
போது ஆனந்தம் மகிழ்ச்சியில்
அருவி போல கொட்டியது
தாலாட்டு அப்போது

இரண்டு ஒன்று இன்றோ 
நாமேகுழந்தை என்றான 
போது தாலாட்டும் கானல் 
நீராய் , வற்றிய குளமாய் , "

புரியாத புதிராக இன்றைய
தாலாட்டு ஆனாலும் தாய்ப்
பாசத்தில் குறையில்லை 
எந்நாளும் தாலாட்டு தூக்கம்
தரும் அமைதியான சங்கீதம் " 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com