இன்றைய தாலாட்டு
இயற்கையாக இருப்பது
இல்லை.
தாலாட்டு கேட்டு
தூங்கும் குழந்தைகள்
தற்போது இல்லை.
ஆரோரோ ஆரோரிரோ
அரிதாக க் கூட
கேட்பதில்லை இன்று.
திரைப் பாடல்களிலேயே
கேட்க முடிகிறது
எப்போதேனும்
பழைய தாலாட்டுக்கள்.
பெற்று எடுப்பவளுக்கும்
பாடத் தெரிவதில்லை
தாலாட்டு.
தாலாட்டுக் கேட்டு
வளரந்தவர்கள்
பாக்கியவான்கள்.
தாயிலும்
வாடகைத் தாய் உண்டு.
தாலாட்டுப் பாடவும்
தாய்கள் இல்லை இன்று.