சில்லறை இல்லையென்றால் இல்லை
உனக்கு மரியாதை ! உண்மையும்
நேர்மையும் போடுமா உனக்கு சோறு ?
"பிழைக்கத் தெரியாத மனிதன் நீ "
இந்த ஒரு பட்டம் மட்டுமே அந்த
மனிதனுக்கு கிட்டிய சொத்து நேற்றுவரை !
இன்று கல்லறையில் அவன் அடங்கும் வரை
அவன் அருமை அவனுக்கே தெரியாது !
அவன் உறங்கும் கல்லறை மேல்
எத்தனை எத்தனை மலர் வளையம் இன்று !
அவன் இறப்பிலும் அவரவர் ஆதாயம்
தேடி அவனுக்கு சூட்டும் பட்டம் எத்தனை
எத்தனை இன்று !
"பிழைக்கத்" தெரியாத அந்த ஒரு மனிதன்
பெயர் சொல்லி தங்கள் "பிழைப்பை"
நடத்த துடிக்கும் ஒரு பெரிய கூட்டத்தின்
நாடகத்தின் நடுவில் கல்லறைப் பூக்கள்
மட்டும் வடிக்குது கண்ணீர், மறைந்த
அந்த மனிதனை நினைத்து !