கவிதைமணி
கல்லறைப் பூவின் கண்ணீர் துளி: இளங்கவி.சுசிமணாளன்
வந்தார்கள் புதைத்தார்கள் சென்றார்கள் காதலை
ஆணவ கொலைகாரர்கள் அமைதியாக ....
மனதில் புதைத்த கண்ணீரை பெருக்கி
மண்ணில் புதையுண்ட காதலர்கள்...
மக்கிப்போன நினைவுகள் காதல் விதையை
காதலர் கண்ணீர் கொண்டு வளர்த்தது...
காதல் ரோசாப்பூக்கள் மலர்ந்திருந்த ஆனால்
காதலர்களின் கண்ணீர் துளிகள் அவைகளை
வளர்த்தன என்பதை யாரறிவார் ...?!