உயிர் உறிஞ்சிய உடலைஉறுஞ்சும் கல்லறையே! நீபூக்களை சூட்டிக்கொள்கிறாய்!பூத உடலை பூட்டிக் கொள்கிறாய்!காலன் கணக்கு முடித்தவனைவரவு வைக்கிறாய்!அவன் சூட்டி வந்த மலரை மட்டும்கருக வைக்கிறாய்!ஓ மனிதர்களே!நான் கல்லறைப் பூகண்ணீரோடு கேட்கின்றேன்இறந்தது மனிதன் தானேஎன்னை ஏன் கல்லறையில்வைக்கிறீர்கள்?மண்ணில் விளைந்ததை மனிதன் உண்டதால்மனிதனை மண்உண்ணுகிறது கல்லறையில்மலர்களை ஏன்?பூச்சூடிய பெண்கள்உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கசட்டம் வந்தது!பூக்கள் உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கஎப்போது சட்டம் வரும்?