கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி: பொன். குமார்

கண்ணீர்த் துளிகளால் 
கட்டப் பட்டது
கல்லறை.

ஒவ்வொரு கல்லறைக்குள்ளும்
புதைக்கப் பட்டிருக்கும்
ஏராளமான சோகங்கள்.

இழப்பின் வலி
இருப்பவர் அறிவர்.
இறப்பின் வலி
இறந்தவரே அறிவர்.

கல்லறையின் மேல்
காணப் படுவது
பனித்துளிகள் போலான
கண்ணீர்த் துளிகள்.

அழுவதால் தீர்ந்து விடும்
இருப்பவரின் சோகம்.
இறந்தவரின் சோகம்
கல்லறையின் மீது
கண்ணீர்த் துளிகளாக
காட்சி அளிக்கின்றன.

கண்ணீரைத் துடைக்கும்
கரங்களுக்காக காத்திருக்கின்றன
கல்லறைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com