கல்லறைப்பூவின் கண்ணீர்த்துளி: கவிஞர் கோவிந்தராஜன் பாலு

சோலையிலே பூத்திட்டேன் சொக்கித்தான் நானும்.
சுற்றிவரும் வண்டுகளும் சுவைத்தனவே தேனும்.
மாலையாகக் கோர்த்திட்டார் மகிழ்வாலே வெட்கம்.
மணவறைக்குச் சென்றால் மலர்ந்திடுமே சொர்க்கம்.
மாலையையும் போட்டுவிட்டார் மாண்டவனின் மீது.
மங்கையுமே கதறினாளே மாற்றுவழி
ஏது. ?
பாலையாகி வாழ்க்கையுமே பட்டுத்தான் போகும்.
பாவிமகள் கண்ணீரில் பாழுடம்பு
வேகும்.

பிறக்கின்றோம் மணக்கின்றோம் பெருமையுடன் பூத்து.
பெண்ணினமும் விரும்பிடவே பேருவுவகைக் காத்து.
உறவாக நினைக்கின்றோம் உள்ளன்பு கொண்டு.
உறவுகளைப் பிரிகின்றோம் ஒருநாளில் மாண்டு.
சிறப்பாகப் பூமியிலே செம்மையுடன் வாழ்ந்து.
செய்தக்க நாளெல்லாம் செய்திடுக
ஆழ்ந்து.
பிறவாமை வேண்டிடுவோம் பெற்றவனே வாவா
பெருமையெல்லாம் உன்னருளே
பிறழாமல் தாதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com