நெரு நெல் உளனொருவன் இன்று இல்லை
என்னும் பெருமை படைத்த இந்த உலகில்
இரவில் கண்ணுறங்கி மீண்டும் கண் விழிக்கும்
அந்த இனிய காலை நேரமே நம் யாவருக்கும் ஒரு
மறு ஜென்மம் ! மறுக்க முடியுமா இந்த உண்மையை ?
கிடைத்தது ஒரு அரிய மனிதப் பிறவி ...தெரியும் இந்த
உண்மை நமக்கு ! தினமும் காலையில் நாம்
எடுப்பது ஒரு மறு ஜென்மம் ! இதுவும் தெரியும் நமக்கு !
இருக்கும் அந்த ஒரே ஒரு நாளில் மறக்கலாமா
நாம் மனித நேயம் ?
தினம் காணும் மறு ஜென்ம விடியல் மறந்து
வேறு ஒரு புது ஜென்ம மாய வலையில்
சிக்கி, கிடைத்த மனிதப் பிறவியின் மதிப்பைக்
குறைக்க வேண்டாமே நாம் !
மனிதராய் பிறந்தோம் ...மனிதராகவே
வாழ்ந்து காட்டுவோம் ! அது ஒன்றே நமக்கு
கிடைத்த மனிதப் பிறவியின் பயன் !