வணிகம் செய்ய வந்தவன் வெள்ளையன் நம் நாட்டை .வசப்படுத்தி அடிமையாக்கிக் கொள்ளை அடித்தான் !.இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் .என்று மக்களைக் கொடுமைப் படுத்தினான் !.விடுதலை வேண்டிப் போராடினார்கள் அன்று .வியர்வையும் ரத்தமும் சிந்திப் போராடினார்கள்!.வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைக்காக .வீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்தான் !.வேலுமங்கை வீர நாச்சியார் வெள்ளையரோடு .வேங்கையென பாய்ந்து வீரப் போர் புரிந்தார் !.குயிலி வெடிமருந்துக் கிடங்கில் தீயுடன் குதித்து .குவலயத்தின் முதல் தற்கொலைப் படையானாள் ! .தடியடி பெற்றனர் சிறைக்குச் சென்றனர் .தள்ளாத வயதிலும் போராட்டம் நடத்தினர் !.கடலில் கிடைக்கும் உப்புக்கு வரி விதித்தான்.காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்தினார் ! .அயல்நாட்டுத் துணிகளை மக்கள் புறக்கணிக்க .அண்ணல் காந்தியடிகள் மக்களிடம் வேண்டினார் !.பொது இடத்தில் குவித்து வைத்து தீ இட்டனர் .பொது மக்களும் வேண்டுகோளை நிறைவேற்றினர் !.கொடியைக் காத்து உயிரை விட்ட திருப்பூர் .குமரன் மக்கள் மனதில் இடம் பிடித்தான் !.செக்கை இழுத்து சிறையில் வாடி வதங்கிய .செந்தமிழர் வ .உ .சி நெஞ்சமெல்லாம் நிறைந்தார் !.நேதாசி சுபாசு சந்திரா போசு அவர்கள் .நாளும் படை திரட்டி ஆயுத வழி போராடினார் !.அமைதிவழி ஆயுதவழி இரு வழியிலும் .ஆங்காங்கே போராட்டம் புயலானது !.வேறு வழியின்றி வெள்ளையன் .விடுதலை வழங்கிச் சென்றான் !.இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று .எல்லா நாட்டுக்காரனும் ஆளுகிறான் இன்று !.உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டை .உலகமே கொள்ளை அடித்து மகிழ்கின்றது !.இன்னுமொரு விடுதலைப் போராட்டம் .இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
வணிகம் செய்ய வந்தவன் வெள்ளையன் நம் நாட்டை .வசப்படுத்தி அடிமையாக்கிக் கொள்ளை அடித்தான் !.இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் .என்று மக்களைக் கொடுமைப் படுத்தினான் !.விடுதலை வேண்டிப் போராடினார்கள் அன்று .வியர்வையும் ரத்தமும் சிந்திப் போராடினார்கள்!.வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைக்காக .வீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்தான் !.வேலுமங்கை வீர நாச்சியார் வெள்ளையரோடு .வேங்கையென பாய்ந்து வீரப் போர் புரிந்தார் !.குயிலி வெடிமருந்துக் கிடங்கில் தீயுடன் குதித்து .குவலயத்தின் முதல் தற்கொலைப் படையானாள் ! .தடியடி பெற்றனர் சிறைக்குச் சென்றனர் .தள்ளாத வயதிலும் போராட்டம் நடத்தினர் !.கடலில் கிடைக்கும் உப்புக்கு வரி விதித்தான்.காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்தினார் ! .அயல்நாட்டுத் துணிகளை மக்கள் புறக்கணிக்க .அண்ணல் காந்தியடிகள் மக்களிடம் வேண்டினார் !.பொது இடத்தில் குவித்து வைத்து தீ இட்டனர் .பொது மக்களும் வேண்டுகோளை நிறைவேற்றினர் !.கொடியைக் காத்து உயிரை விட்ட திருப்பூர் .குமரன் மக்கள் மனதில் இடம் பிடித்தான் !.செக்கை இழுத்து சிறையில் வாடி வதங்கிய .செந்தமிழர் வ .உ .சி நெஞ்சமெல்லாம் நிறைந்தார் !.நேதாசி சுபாசு சந்திரா போசு அவர்கள் .நாளும் படை திரட்டி ஆயுத வழி போராடினார் !.அமைதிவழி ஆயுதவழி இரு வழியிலும் .ஆங்காங்கே போராட்டம் புயலானது !.வேறு வழியின்றி வெள்ளையன் .விடுதலை வழங்கிச் சென்றான் !.இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று .எல்லா நாட்டுக்காரனும் ஆளுகிறான் இன்று !.உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டை .உலகமே கொள்ளை அடித்து மகிழ்கின்றது !.இன்னுமொரு விடுதலைப் போராட்டம் .இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்