தொண்டுக்கென்றே புறப்பட்டு
துண்டு போட்டு இடம் பிடிக்கும்
தறுதலைகளிடமிருந்து
எப்போது விடுதலை ?
நாளொரு பொழுதாய் மீளாத
தொடர்கதையாய்ப்போன மீனவர் வாழ்வில்
விடுதலை எப்போது?
சல்லிக்கட்டு,மீத்தேன்,கெயில்,ஹைட்ரோ கார்பன் என
சீண்டிப்பார்க்கும்
சிறுமதியாளர்களிடமிருந்து
எப்போது விடுதலை?
ஒருவேளை,
காமராசரும் பேரறிஞரும்,
மீள வரும்வேளை தான்
சாத்தியமோ?இது சத்தியமோ?