விடுதலை :- ஆ.மகராஜன்

அன்று தம் உயிரையும் உதிரத்தையும்
விலையாய்க் கொடுத்து 
தேசத்தின் வளங்களைக்
கொள்ளையடித்த வெள்ளையர்க் கூட்டத்தை 
விரட்டியடித்து விடுதலை பெற்றுத் 
தந்தனர் தேசத் தியாகிகள் ..

இன்று வெள்ளையர் இடத்தினில் 
ஆட்சி அதிகாரமுடன் 
அமர்ந்த கொள்ளையர் கூட்டம்
சொந்த தேசத்தையே 
சுயநலத்தோடு சுரண்டிச் 
சூறையாடிக் கொண்டிருக்கிறது...

இரண்டாவது விடுதலைப் போரை 
முன்னெடுத்துச் செல்லும் 
இன்னொரு மகாத்மாவுக்கும் நேதாஜிக்கும் 
ஏக்கத்தோடு காத்து நிற்கிறது 
எங்களது இன்றைய தேசம்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com