காலைப் பொழுதை
உறங்கிக் கெடுக்கும்
உடல் சோம்பலிருந்து
விடுதலை வேண்டும்!
அறிவை மறந்து
மதிப்புப்பெண் பெறும்
கல்வி படிப்பிலிருந்து
விடுதலை வேண்டும் !
பணம் பதவிக்காக
பண்பை மறந்து
வாழும் நிலையிலிருந்து
விடுதலை வேண்டும்!
வேண்டும் வேண்டும்
எல்லோருக்கும் வேண்டும்
எண்ணத்தில் சிந்தனையில்
விடுதலை வேண்டும்!