விடுதலை: ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

அந்நியர்களிடமிருந்து விடுதலை
பெற்றோம் அன்று போராடி
நம்மவர்களிடமே விடுதலை பெற
போராட வேண்டியுள்ளது இன்று.
கொள்கையற்ற அரசியல்வாவாதி
கொள்ளை அடிக்கும் ஊழல்வாதி
இயற்கையை அழிக்கும் எத்தர்கள்
இவர்களிடமிருந்து வேண்டும் விடுதலை.
கல்வியை காசக்கும் கல்வித்தந்தைகள்
மனச்சாட்சியற்ற மருத்துவர்கள்
பெண்ணைப் பாழாக்கும் காமுகர்கள்
இவர்களிடமிருந்து வேண்டும் விடுதலை.
யாரையும் நீ நம்பி விடாதே
உன் விடுதலை உன் கையில் தான்
படிப்பு மட்டுமே உன்னை விடுதலையாக்கும்
அதற்கு கல்வி மட்டுமே தீர்வாகும் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com