விடுதலை: பாவலர் கருமலைத்தமிழாழன்

ஆலைகளின்  கழிவுகளை  ஆற்றில்  சேர்க்கும்
            அநியாயப்   போக்கிற்குத்   தடைவி   தித்து
சோலைகளைத்   தோப்புகளைப்   பாது  காத்து
            சொரிகாற்றின்   மாசகற்றித்   தூய்மை   யாக்கி
சாலைகளின்   இருபுறமும்   மரங்கள்  நட்டுச்
            சரியாக   வளரவைத்துச்   சூழல்   பேணிக்
காலையிலே   எழுந்தவுடன்   கைகள்   வீசிக்
            கால்நடந்து   விடுதலையைத்   தருவோம்   நோய்க்கே !

அதிகார   ஆட்சிகளின்   ஏவ   லுக்கும்
            அரசியலார்   ஆர்ப்பாட்ட   வன்மு   றைக்கும்
பதிலேதும்   சொல்லாமல்   அமைதி   யாகப்
            பரிதாப  அடிமையராய்   வாழ்தல்   விட்டுப்
புதிதான   ஊழலற்ற   சமுதா   யத்தைப்
            புரட்சியிலே   நிறுவுதற்குத்   துணிவை   ஏற்று
விதிதன்னை   மாற்றியெல்லாம்   பொதுமை   யாக்க
            விடுதலையைத்   தந்திடுவோம்   அச்சத்   திற்கே !
 

குடிதனக்கு   விடுதலையை   அளித்தே   இன்பம்
            குடியேற்றி   வீடுதன்னை   ஒளிர   வைப்போம்
மடிதனக்கு   விடுதலையை   அளித்தே   கையின்
            மாவுழைப்பால்   நாடுதன்னை   உயர   வைப்போம் !
நடிப்பிற்கு   விடுதலையை   அளித்தே   உண்மை
            நட்பன்பால்  அனைவரையும்   அணைத்தே   நிற்போம்
துடிக்காத   தன்னலத்தைத்   துரத்தி   விட்டுத்
            துயர்போக்கும்   மனிதநேயம்   நெஞ்சில்  வைப்போம் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com