விடுதலைப் பெற்ற நாட்டில்
வாழ்ந்து கொண்டிருந்தாலும்
பலவற்றிலிருந்து
மக்களுக்குத் தேவைப் படுகிறது
விடுதலை.
வறுமைப் பிடியிலிருந்து
விடுதலைப் பெற வழியின்றி
வாடிக் கொண்டிருக்கிறார்கள்
பல கோடியர்.
அலுவல் பிடியிலிருந்து
அனேகருக்குத் தேவை
விடுதலை.
பசியிலிருந்து
மக்களுக்கு எப்போதும்
கிடைப்பதில்லை
விடுதலை.
விடுதலை நாளில் கூட
மக்களிடம் இருப்பதில்லை
விடுதலை உணர்வு.
அன்னியரிடமிருந்து
விடுதலைப் பெற்றிருந்தாலும்
அடிமைப் படுத்தியே
மக்களை வைத்துள்ளார்கள்
அரசியல்வாதிகள்.
ஆங்கிலேயரைப் போலவே
ஆட்சியாளர்களும்
ஜனநாயகப் போர்வையில்
அதிகார ஆட்சிச் செய்கிறார்கள்.