அகிலத்தில் அனுதினம்
உண்மைக்கு போராடும்
உயர்ந்த உள்ளம் படைத்தவளோ?
ஏறு கொண்ட பார்வையும்
ஏந்தி நிற்கும் வாளும்
எத்திசையும் போற்றத் தகுந்தவளோ?
காவியப் பெண்ணோ?
கவிதை பாடும் கலைமகளோ?
கிளி மொழியோ?
கிள்ளைத் தமிழோ?
தரணி போற்றும் கவி மகளோ?
வீர மங்கை இவளோ?
விருதுகள் பெற்றவளோ?
நட்பு கொண்ட இதயத்தில்
நற்பண்புகள் விளைத்தவளோ?
தட்டிக் கேட்க்கும் தாரகையோ?
தளராமல் போராடும் போராளியோ?
ஓவியப் பெண்ணோ?
ஓங்கு புகழ் பேரழகோ?
ஜீவியத் தமிழில்
ஜீவனை உயிர்ப்பித்தவளோ?