வெள்ளையரை எதிர்த்தார்
வேலு நாச்சியார்...
முதல் தற்கொலைப் போராளியானார்
வீரப்பெண் குயிலி...
அன்னிய மண்ணிலும் போராடினார்
தில்லையாடி வள்ளியம்மை...
இவர்களின் வீரம்
நாட்டைக் காத்தது !
பெண்மை மென்மையென
காட்டியது போதும்...
நானத்தால் மறைந்து
நின்றது போதும்...
பொதுவெளியில் உரக்கப் பேச
யோசித்தது போதும்...
உண்மைக்கு மட்டுமே பயப்படு
நீ வீரமங்கை மறந்து விடாதே!
குடிகார கணவனிடம் நீ
போராட வேண்டும்...
பழைமைவாதிகளின் பிடியிலிருந்து நீ
விடுபட வேண்டும்...
பெண் பித்தர்களை நீ
மோதி வெற்றி பெற வேண்டும்...
உன்னிடம் உள்ள வீரம் மட்டுமே
உன்னை காக்கும் வீரமங்கையே!