நீயுங்கூட வீரமங்கைதான்!
-மன்னார்குடி மாஃபியாக் கும்பலின்
வஞ்சக வலையில் வீழாதிருந்திருந்தால்!
-அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களின்
அடி வயிற்றில் அடிக்காதிருந்திருந்தால்!
-ஐதராபாத்திலிருந்து கன்னியாகுமரி வரை
அத்தனை சொத்துக்களையும் வாங்காதிருந்திருந்தால்!
-ஆணவ அரசியல் நடத்தி அதுதான்
அம்மா ஸ்டைலென்று காட்டாதிருந்திருந்தால்!
-முகஸ்துதிக்கு முக்கியத்துவம் கொடுத்து
தகுதியற்றவர்களுக்குப் பதவிகள் வழங்காதிருந்திருந்தால்!
-யாருக்கோ திருமணம் செய்யப்போய்
நகைக்கடைப் பொம்மையாய் நடமாடாதிருந்திருந்தால்!
-வாக்காளர்களை விலைக்கு வாங்கும்
வன்ம புத்தியைத் தொலைத்திருந்தால்!
-தாது மணலையும் ஆற்று மணலையும்
விலை பேசி விற்காதிருந்திருந்தால்!
-மது அரக்கனை டாம்பீகமாக
டாஸ்மாக் கடைகளுக்கு விடாதிருந்திருந்தால்!
-புலியாய் வலம் வந்த நீ
பூனையாய்ச் சாவாது இருந்திருந்தால்!
-துரோகிகளை வளர்த்து விட்டதால்
இறப்பும் உனக்குத் துரோகமாகிப் போனது!
-ஆனாலும் இருந்த வரை நீ இரும்புப் பெண்தான்!
இறந்தவர்களின் புகழ்பாடுவதே இம் மண்ணின் மரபு!
-அந்த வகையில் நீ வீரமங்கை தான்!
குற்றங்களை மறந்து உன் புகழ்பாடுவோம்!