வீரமங்கை: -ரெத்தின.ஆத்மநாதன்

நீயுங்கூட   வீரமங்கைதான்!
-மன்னார்குடி  மாஃபியாக் கும்பலின்
வஞ்சக வலையில் வீழாதிருந்திருந்தால்!

-அஞ்சுக்கும்  பத்துக்கும் அல்லாடுபவர்களின்
அடி வயிற்றில் அடிக்காதிருந்திருந்தால்!

-ஐதராபாத்திலிருந்து கன்னியாகுமரி வரை
அத்தனை சொத்துக்களையும் வாங்காதிருந்திருந்தால்!

-ஆணவ அரசியல் நடத்தி அதுதான் 
அம்மா ஸ்டைலென்று காட்டாதிருந்திருந்தால்!

-முகஸ்துதிக்கு முக்கியத்துவம் கொடுத்து
தகுதியற்றவர்களுக்குப் பதவிகள் வழங்காதிருந்திருந்தால்!

-யாருக்கோ  திருமணம்  செய்யப்போய்
நகைக்கடைப் பொம்மையாய் நடமாடாதிருந்திருந்தால்!

-வாக்காளர்களை விலைக்கு வாங்கும்
வன்ம புத்தியைத் தொலைத்திருந்தால்!

-தாது மணலையும் ஆற்று மணலையும்
விலை பேசி விற்காதிருந்திருந்தால்!

-மது அரக்கனை டாம்பீகமாக
டாஸ்மாக் கடைகளுக்கு விடாதிருந்திருந்தால்!

-புலியாய் வலம் வந்த நீ
பூனையாய்ச் சாவாது இருந்திருந்தால்!

-துரோகிகளை வளர்த்து விட்டதால் 
இறப்பும் உனக்குத் துரோகமாகிப் போனது!

-ஆனாலும் இருந்த வரை நீ இரும்புப் பெண்தான்!
இறந்தவர்களின் புகழ்பாடுவதே இம் மண்ணின் மரபு!

-அந்த வகையில் நீ வீரமங்கை தான்!
குற்றங்களை மறந்து உன் புகழ்பாடுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com