வீரமங்கை: கெளதம் ராஜா

வீரம் வலியை தருவதல்லவலியை தாங்குவதே வீரம் ...வலியினில் வலிமையாம் பிரசவவலிஎன்னை ஈன்றெடுக்க தாங்கினாயேதாயே!!நீயே வீர மங்கை...பிரிவின் வலியை பிரித்தவரிடம்காட்டுவதே மனித இயல்பு,இயல்பைமறந்தாயே!-பிரித்தவரிடமும்பிரியமாய் பிரிவின் வலியோடுவாழ்கிறாயே புகுந்த வீட்டில்..சகோதரியே!!நீயே வீர மங்கை...அப்பா அம்மா ஓய்விற்கு,மூத்த சகோதரி திருமணத்திற்குதம்பி தங்கை கல்விக்குபிணியிலும் பணி செல்கிறாயே,துளியும் வலியைவெளிப்படுத்தாமல்..தோழியே!!நீயே வீர மங்கை...நான் தரும் வலிகளையும்என்னால் ஏற்படும் வலிகளையும்துணிவோடு தாங்க காத்திருக்கும்என்னவளே!!நீயே வீர மங்கை...ஆண் வீரனே(??) சிந்தி..வலியை தருவதல்ல வீரம்;வீரம் வலியை தாங்குவதே ...வலியை தாங்கும் மங்கையாவருமே வீர மங்கையே!!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com