நிழல் தேடி: ஆண்டனி லியோ பிரபா

பசுமையான சோலையில்
படர்ந்திருந்தது ஒற்றை ரோஜா
பகலவனாய் தன்மன்னன் வருவானென ,
பரிதவிக்கும் நெஞ்சத்தோடு !
குழலூதும் கண்ணனாய்
பக்கம் வந்து பாட்டிசைத்து இதயராகத்தை
மீட்டாமல் மீட்டினான் ,
ஏங்கிய மனதிற்குள்
தேன்சொரிய விருந்துவைத்து
இதழ்களில் கனிரசத்தை
இயற்கையாய் ஊறச்செய்து
ராஜாவாய் விருந்துண்டு
இளைப்பாறப் பறந்துவிட்டான்
இனியொருநாள் வருவோமென ,
தன் இருப்பிடமாம் நிழல் தேடி
தாகம்தீர்ந்த தலைவனாம் வண்டினமே !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com