நிழல் என்பது
நிரந்தரமற்றது.
நிஜமற்றது.
நேரத்துக்கு ஏற்ற மாதிரி
உருவம் மாறி விடும்
நிழல்.
நிழலாக தொடர்ந்தாலும்
நிஜமாக முடியாது.
நிழலை நம்பி ஏமாந்த
நிஜங்களாக உள்ளனர்
நாட்டு மக்கள்.
நிஜத்தையே தொலைத்து
நிழல்களைத் தேடுபவர்களாகவும்
நிறையபேர் நடமாடுகின்றனர்.