உலக உயிரிகளின்
உன்னதமான மனிதன்
புவியின் ஈர்ப்பால்
வான்நோக்கிய சிந்தனையால்
பகுத்தறியும் ஆற்றலால்
பண்பட்ட நாகரிகத்தை
நீரோடிய ஆற்றங்கரையில்
நிறைவுடன் வாழ்ந்தான்!
நீரோடிய ஆற்றில்
கழிவுநீரை கலந்து
ஆற்றோர மணலை
சுரண்டி பிழைக்கும்
பகுத்தறியா மனிதனின்
பண்பற்ற செயலால்
தலைக் குனிவு
மனித இனத்துக்கே!