நீரோடும் பொழுதினிலே ஆறோடும்
நீ ஓடும் பொழுதினிலே ஆர் வருவார் சொல் மகளே
நான் ஆறோடும் போனதில்லையே
நான் யார் ஓடும் இல்லையடி சொல் மகளே
நீரோடும் பொழுதினிலே எனக்கு ஆறிருப்பார்
நீ ஓடும் பொழுதினிலே யார் இருப்பார் சொல் மகளே
நான் ஆறோடும் போனதில்லை
நான் யாரோடும் இல்லையடி செல்வ மகளே
நீரோடும் ஆரோடும் எவர் வருவார்
நீர் ஓடும் பயன் எனக்கு விளங்குதில்லை
நான் ஓடும் பயன் உனக்கு மட்டும் சொந்தமென்று உணர்வாயோ
செல்வ மகளே செல்ல மகளே