ஆறோடும் நீரோடும்: கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

ஆறோடும் மண்ணெல்லாம் கடத்தி விட்டார்      அகன்றநதி குறுகிவிட நீரும் வற்றஊரோடும் உறவோடும் வாழ்ந்த மக்கள்       ஒருதொழிலாம் விவசாயம் விட்டு விட்டுகாரோடும் நகருக்கு வந்து விட்டார்       கண்டதொழில் செய்வதற்கு முனைந்து விட்டார்பேரோடும் பெருமிதமாய் வாழ்ந்தி ருந்த      பெருங்கதையை ஒரேயடியாய் மறந்து விட்டார்.நீரோடும் பாதையெலாம் கொஞ்சங் கூட      நிலமிருந்தால் ஆக்கிரமித் துவிட்டு நல்ல சீரான கட்டடத்தைக் கட்டி விட்டு     செயலாக மறந்ததனால் மழையால் வெள்ளம்ஆறதனில் பாய்வதற்கு இடமு மின்றி     அங்கங்கே பாய்ந்துவிட்டு வழியு மின்றிஊருக்குள் பாய்ந்ததனால் அழிவைச் செய்த     ஒருபாடம் கற்பித்துச் சென்ற தம்மா...இயற்கையவள் மடியினிலே கையை வைத்தால்      என்றும்நம் சீரழிவின் கார ணத்தைஇயற்கையாக வரவழைத்துக் கொள்ளு கின்றோம்       எத்தனையோ இடங்களிலே பாடங் கற்றோம்முயற்சிசெய்து காப்பதற்கு முன்னெ டுப்போம்        முடிந்தமட்டும் மரம்வளர்த்து காடு செய்துவியக்குவண்ணம் மழைபெய்ய வைப்போம் இந்த       வியனுலகை வருந்தலைமு றைக்காய்க் காப்போம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com