குழந்தையின் குரல்: பாவலர் கருமலைத்தமிழாழன்

முன்னோர்கள் தூய்மையாக   வைத்தி  ருந்த     மூச்சிழுக்கும்    காற்றினிலே   நஞ்சை   சேர்த்தீர்முன்நின்று   காற்றிலுள்ள   அசுத்தம்    நீக்கும்     முதலுதவி   மரங்களினை    வெட்டிச்   சாய்த்தீர்பொன்கதிரை   வடிகட்டி   ஒளிய   னுப்பும்     பொற்கவச    ஓசோனை   ஓட்டை   செய்தீர்என்னவைத்தீர்குழந்தைகள்தாம்  வாழ்வ  தற்கே     எல்லாமும்   கலப்படத்தால்  கெடுத்து   வைத்தீர் !ஆயிரமாம்   ஆண்டுகளாய்    சேர்த்து   வைத்த      அடிநீரைக்   குழாய்வழியே   காலி   செய்தீர்பாய்மரம்போய்   கடல்நீரில்   எண்ணெய்   குண்டால்       பரிதவிக்க   மீன்களினைச்   சாக   டித்தீர்தாய்மண்ணில்   உரங்களினைப்    போட்டுப்   போட்டுத்       தரும்விளைச்சல்   எனஉறிஞ்சி   சக்கை   செய்தீர்சேய்களுக்கே   என்னவைத்தீர்    தன்ன   லத்தால்       செழித்திருந்த   இயற்கையினைக்    கெடுத்துவைத்தீர் !அறிவியலால்    அணுக்குண்டை   வெடிக்க   வைத்தே      அழிவிற்கே   அறிவென்று   பயிற்று   வித்தீர்நெறிகளினைக்   குழிதோண்டிப்   புதைத்து    விட்டு      நியாயத்தை   அதர்மத்தில்   அடக்கி   வைத்தீர்வெறியூட்டி   சாதிமதம்    பெருக்கு   வித்தே      விளைந்திருந்த    மனிதநேயம்    கருக   வைத்தீர்குறிக்கோளாய்   குழந்தைகட்கே   என்ன   வைத்தீர்      குற்றுயிராய்   வாழ்க்கையினை   விட்டு   வைத்தீர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com