மேகப் பயணத்தில் கரைந் த்தே நிலா – அதன்
மௌனமே ஓர்நாளில் இல்லை உலா
தாகத்தால் குடிநீர் தேடி குடித்தாயோ ? – காதல்
தாபத்தை தணிக்க தூதுக்கு துடித்தாயோ?
உன்னைக் காட்டி ஊட்டிட்டாள் சோறு – இன்று
ஒளியலைபேசி காட்டியேதான் சோறு
தென்றல் வீசும் கடற்கரையின் ஓரம் – ஜோடி
கிளிகளின் காதல்மொழி சிருங்காரம்!
மதியென்றே உன்னை சொல்கின்றார் – நீயோ
மதியினை மயக்கியே கொல்கின்றாய்!
மதிமயக்கும் உன்னழகில் மயங்கி தான் - மேக
மன்னனவன் அணைப்பினில் கிறங்கி னாயோ?
உன்னிடத்தில் குடியேக வருகின்றார்- மனிதர்
உன்னெழிலை பறிக்கவே விரைகின்றார்
என்சேதி இதுவென்றே சொல்லு கின்றேன்- நீ
இன்முகத்தில் ஒளியேற்றி கொல் கின்றாயே!